விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!! பின்னணி என்ன??

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த நகை திருட்டு சம்பவம், ஒருவர் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடப்புரத்தைச் சேர்ந்த 27 வயது அஜித் குமார், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் அந்த கோயிலில் பாதுகாப்பாளராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த 75 வயது சிவகாமி என்பவர் தனது மகள் நிகிதாவுடன் கோயிலுக்கு வந்தபோது நடந்த சிக்கலே இச்சம்பவத்துக்கு காரணம்.

சிவகாமிக்கு நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவும், காரை நிறுத்தவும் அஜித் குமார் உதவினார். ஆனால், தரிசனம் முடிந்தபின் நிகிதா தனது காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அனுப்பினர். பின்னர் தனிப்படை போலீசார் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் போது உடல்நிலை மோசமாகிய அஜித் குமார், மதுரையில் தனியார் மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தி வருகிறார். அஜித் குமாரின் மரணத்தால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தற்காலிக நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் (கண்ணன், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெறும் என்று மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram