China: உலகத்தில் அதிவேகமாக செல்லும் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
சீனா தற்போது சி ஆர் 450 என்ற புல்லட் ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. இது நகரங்களுக்கு இடையே உள்ள குறுகிய தொலைவில் பயணிக்கப்படும் நகரங்களுக்கு மட்டும் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ரயிலின் அதீத வேகத்தில் பயணிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சீனா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாடு, டெக்னாலஜி போக்குவரத்து என்று எந்த துறையில் எடுத்தாலும் தன்னுடைய டெக்னாலஜியை அந்த இடத்தில் நிரூபித்துக் காட்டுகிறது சீனா மற்ற நாடுகள் சீனாவை கண்டு வியக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த ரயில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டரை 2 மணி நேரத்தில் கடந்து செல்ல முடியும். இது காற்றியே கிழித்துச் செல்லும் ஒரு அதிவேக ரயில் எனக் கூறப்படுகிறது. தற்போது வரை சீனாவில் 350 கிலோமீட்டர் வரை செல்லும் ரயில் தான் இயக்கப்பட்ட வருகிறது. சீனாவில் உள்ள தற்போதைய அதிவேக ரயில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும். தற்போது உலகிலேயே மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுதான் சீனா. சீனாவில் 48 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிவேக ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. மேலும் 2030ம் ஆண்டுக்குள் 60 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாம்.