உலகளாவிய பங்க புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் முக்கிய பங்காற்றி வருகிறது. மூன்று மாநிலங்கள் இணையும் முச்சந்திப்பு வனப்பகுதிகள் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. புலிகளுக்கு காப்பகங்கள் அமைக்கப்பட்ட போதிலும் வாழிட பற்றாக்குறையால் புலிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. புலிகள் வேட்டையாடுதல் மற்றும் நஞ்சு கலக்கப்பட்ட கால்நடை உடல்கள் போன்றவற்றை கொண்டு புலிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மூன்று மாநிலங்களிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் நேற்று காலையில் தாய்மொழி மற்றும் குட்டி புலிகள் 4 என மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. ரோந்து பணியின் போது வனத்துறை களப்பணியாளர்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் புலிகளின் உடல்களை பரிசோதனை செய்து வருகின்றன.
எட்டு வயது உடைய பெண் புலி மற்றும் இரண்டு வயதுடைய நான்கு குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன என சாம்ராஜ்நகர் வனத்துறையினர் கூறினார். மேலும், உடற்கூறு ஆய்வின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும், சடலத்தில் விஷம் வைக்கப்பட்டு புலிகளை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என கூறினார்.
ஒரே நேரத்தில் ஐந்து புள்ளிகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது என கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறியுள்ளார். மேலும், முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார்.