சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்துள்ளது. இன்று (மே 23) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 280 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ள நிலையில் ஒரு கிராம் ரூ.8940 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் (மே 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து செய்ய விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 220 அதிகரித்து காணப்பட்டது.
மேலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ 1,760 க்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ 8,930 மற்றும் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ 71,440 க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ 71,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது .மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 க்கு உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8975 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று குறைந்துள்ளது.இதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 280 குறைந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 8940 க்கு விற்பனை செய்யப்படுகிறது அதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.71,520 க்கும் விற்பனை ஆகிறது.