சிம்பு மீது கடும் கோபத்தில் த்ரிஷா?? காரணம் மணிரத்னமா??

Trisha is very angry with Simbu

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஜூன் 5, 2025 அன்று திரையிடப்பட உள்ளது. இந்தப் படம், 1987ஆம் ஆண்டு வெளியான “நாயகன்” படத்திற்கு பிறகு, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் முக்கியமான முயற்சியாகும்.

சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் உணர்ச்சிவசப்படுத்தும் உரைகளை வழங்கினர். சிம்பு, தனது வாழ்க்கையின் கடினமான தருணங்களில் மணிரத்னம் வழங்கிய வாய்ப்பை நினைவுகூர்ந்து, மணி ரத்னம் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார் என உருக்கமாக கூறினார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அவரது மகள் ஷ்ருதி ஹாசன், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையுடன் இணைந்து பாடியுள்ளார்.

 

“தக் லைஃப்” என்பது ஒரு கேங்ஸ்டர் கதையாகும். கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீடு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது . இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் கூறிய “கன்னடம் தமிழ் மொழியிலிருந்து தோன்றியது” என்ற கருத்து, கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது . தக் லைஃப் திரைப்படம், திரையிடப்பட்ட பிறகு, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தக் லைஃப்” படத்திற்கு பிறகு, மணிரத்னம் மற்றும் சிம்பு மீண்டும் இணைந்து ஒரு காதல் திரைப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இந்தப் படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதில் முதலில் த்ரிஷா நடிக்க இருந்த நிலையில் பின் ருக்மணி வசந்த் கதாநாயகி என கூறப்பட்டதால், த்ரிஷா கடும் கோபத்தில் உள்ளதாக தவல்கள் பரவி வருகின்றன.  மீண்டும் இணையும் மணிரத்னம் சிம்பு காம்போ அப்டேட்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றன.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram