இந்தியாவுக்கு வரும் சிக்கல்!! துருக்கியின் அடுத்த துரோகம்!!

Turkey's next betrayal

அங்காரா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியது. இந்திய பாகிஸ்தான் போரில்  துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கி அதிபர் எர்டோகனை நேரில் சந்தித்து நன்றி கூறினார். இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டில் 26 பேரை கொன்றனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் “ஆப்ரேஷன் சிந்துர்”என்று நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை தாக்கியது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை வெடித்தது. இந்தியா பாகிஸ்தானின் ட்ரோன்கள்  மற்றும் ஏவுகணைகளை அழிக்கப்பட்ட தொடர்ந்து இந்தியா ஏவுகணைகளை செலுத்தி விமானப்படை தளங்களை அழித்தது.  தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக கூறியிருந்தது. இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு பெரிய அளவில் உதவியது துருக்கி. துருக்கி நாட்டின் ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இந்தியாவின் மீது செலுத்தியது.

மேலும் இந்த ட்ரோன்களை துருக்கி ஆபரேட்டர்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கியுள்ளார். துருக்கி நம் நாட்டு தாக்குதலை கண்டித்தது. மேலும்,பாகிஸ்தானுக்கு தங்களது ஆதரவு தொடர்ந்து அளிப்போம் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பினை துருக்கி அதிபர் தைப் எர்த்தோகனே அறிவித்திருந்தார். இதன் காரணமாக துருக்கியை நோக்கி செல்லும் இந்திய வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். துருக்கியை இது பொருளாதார ரீதியாக பாதித்தது. துருக்கியை பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சென்ற போது பொறுக்கி அதிபர் ஏர்டோகன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் பிடன், உளவுத்துறை தலைவர் இப்ராஹிம் காலின், பாதுகாப்புத்துறை அமைச்சர் யாசர் குலேர் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

பாகிஸ்தானுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அதிபர் தெரிவித்துள்ளார் மேலும்,வர்த்தகம்,பாதுகாப்புத்துறை ,உளவு தகவல் பரிமாற்றம் போன்றவற்றிலும் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. இது நம் நாட்டிற்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. துருக்கி பக்க பலமாக இருப்பதனால் இந்தியாவை பாகிஸ்தான் சீண்டி வருகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram