அங்காரா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியது. இந்திய பாகிஸ்தான் போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கி அதிபர் எர்டோகனை நேரில் சந்தித்து நன்றி கூறினார். இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டில் 26 பேரை கொன்றனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் “ஆப்ரேஷன் சிந்துர்”என்று நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை தாக்கியது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை வெடித்தது. இந்தியா பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கப்பட்ட தொடர்ந்து இந்தியா ஏவுகணைகளை செலுத்தி விமானப்படை தளங்களை அழித்தது. தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக கூறியிருந்தது. இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு பெரிய அளவில் உதவியது துருக்கி. துருக்கி நாட்டின் ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இந்தியாவின் மீது செலுத்தியது.
மேலும் இந்த ட்ரோன்களை துருக்கி ஆபரேட்டர்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கியுள்ளார். துருக்கி நம் நாட்டு தாக்குதலை கண்டித்தது. மேலும்,
பாகிஸ்தானுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அதிபர் தெரிவித்துள்ளார் மேலும்,வர்த்தகம்,பாதுகாப்புத்