தவெகவின் அடுத்த செயற்குழு கூட்டம்!! அனல் பறக்கும் தேர்தல் வழிமுறைகள்!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி தொடர்ந்து அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தவெக மிக அமைதியாக அதன் தேர்தல் களப்பணிக்கான யூகங்களை வழி வகுத்து வருகின்றது. சமீபத்தில் இதன் தேர்தல் களப்பணி ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தவெக பற்றிய சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் பரப்புவதாக அதன் பொதுச்செயலாளர் புஷ்ஷி ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு தகுந்தார் போல அவ்வப்போது சமூக வலைதளங்களில் விஜய் கட்சி கொடியை காரில் இருந்து அகற்றுவது போலும், அவரைப் பற்றி அவதூறு பரப்புவது போன்றும் வீடியோக்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து புஷ்ஷி ஆனந்த் கூறுகையில், பத்து நாளைக்கு முன்னாடி வேறொரு கட்சியில் இருந்து நம் கட்சிக்கு வந்து நிறுவனராக மாறிய பின் நம் கட்சி செயல்பாடு குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு தலைவர் விஜய் மேல் பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர் குறித்து நெகட்டிவிட்டி பரப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகின்றனர். அதனால் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். நமக்கு நம் தலைவர் உள்ளார் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அந்த கட்சி உண்மை தொண்டர்கள் கை தட்டி உற்சாகம் அடைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்சமயம் பாஜக கூட்டணி குறித்தும் பல தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கட்சி குறித்து அடுத்த செயல்பாட்டை வெளியிட்டுள்ளது தவெக தலைமை நிர்வாகம். அதில் குறிப்பிட்டதாவது, தவெகவின் செயற்குழு கூட்டம் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளது. அடுத்து நடக்க இருக்கும் களப்பணி அண்ணா சுற்றுப்பயணம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கவும், தேர்தல் யூகங்களை மாவட்ட வாரியாக தெரிவிக்கவும் இந்தக் கூட்டம் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram