தவெக வானவில் போன்று!! உதயசூரியன் மட்டுமே நிரந்தரம்..  மறைமுகமாகத் தாக்கிய உதயநிதி!!

Udhayanidhi, who attacked indirectly

சென்னை: தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று (டிசம்பர் 15, 2025) நடைபெற்ற இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது, எதிர்க்கட்சிகளையும், குறிப்பாகப் புதிதாகக் களமிறங்கியுள்ள நடிகரின் கட்சியையும் மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்தார்.

தி.மு.க. இளைஞரணியின் பலம் அதன் கட்டுப்பாடுதான் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி பேச்சு: “நம்முடைய இளைஞரணி கூட்டம் ஒரு சாதாரண கூட்டம் அல்ல, அது மிகுந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிறைந்த கூட்டம். கட்டுப்பாடு இல்லாத ஒரு கோடி பேரை நீங்கள் வைத்துக் கொண்டாலும், அதனால் கட்சிக்குப் பயன் ஏதும் இல்லை; ஒன்றும் செய்ய இயலாது. நாம் எண்ணிக்கையை விட, தரத்தையும் கட்டுப்பாட்டையுமே நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். இது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தைக் (த.வெ.க.) குறிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணியின் ஸ்திரத்தன்மை குறித்துப் பேசும்போது, அவர் வானவில் நிறங்களை உதாரணமாகக் காட்டிப் பேசினார்.

வானவில்லில் பல நிறங்கள் கலராக இருக்கும். பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அது நிரந்தரம் கிடையாது. சிறிது நேரத்திலேயே மறைந்து போகும். ஆனால், நம்முடைய உதயசூரியன் மட்டுமே நிரந்தரம்,” என்று அவர் குறிப்பிட்டார். இது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் புதிதாக முளைக்கும் கட்சிகள் ஆகியவற்றைச் சாடுவதாகக் கருதப்படுகிறது.

உதயநிதியின் இந்த மறைமுக விமர்சனங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram