தளபதியின் ‘மாஸ்டர் பிளான்’ தவெக தேர்தல் அறிக்கை குழுவில் 12 விஐபிகள் மக்களின் தேவைகளை அறிய புது வியூகம்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கித் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அடுத்த அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கட்சியின் கொள்கைகளைத் தாண்டி, மக்களுக்கான நலத்திட்டங்களை வகுப்பதற்காக 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
குழுவில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர்கள்: விஜய் அறிவித்துள்ள இந்தக் குழுவில் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் இளைய தலைமுறை பேச்சாளர்கள் என ஒரு கலவையான டீம் அமைக்கப்பட்டுள்ளது:
அருண்ராஜ்: கொள்கை பரப்புச் செயலாளர்.
ஜேசிடி பிரபாகர்: அதிமுக-விலிருந்து விலகி இணைந்த சீனியர் தலைவர் (நிர்வாக மற்றும் தேர்தல் அனுபவம் மிக்கவர்).
ராஜ்மோகன்: தவெக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் பிரபல பேச்சாளர்.
இது தவிர, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என மொத்தம் 12 உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
கள ஆய்வு: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் இளைஞர்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிவது.
புதிய திட்டங்கள்: மற்ற கட்சிகளின் அறிக்கையிலிருந்து மாறுபட்டு, தவெக-வின் “திராவிட தமிழ் தேசியம்” கொள்கைப்படி நடைமுறைப்படுத்தக் கூடிய வாக்குறுதிகளை உருவாக்குவது.
டிஜிட்டல் கருத்துக்கணிப்பு: ஆன்லைன் வழியாகவும் மக்களின் விருப்பங்களைப் பெற்று, அதனை அறிக்கையில் சேர்ப்பது.
விஜய்யின் அட்வைஸ்: “நாம் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் காகிதத்தோடு நிற்காமல், அது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஆயுதமாக இருக்க வேண்டும்” என இந்தக் குழுவினருக்கு விஜய் கட்டளையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


