Cricket : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர்ந்து பாகிஸ்தானின் தோல்வியை தழுவி அவமானத்தில் இருந்து வருகிறது பாகிஸ்தான் அணி.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தி வருகிறது. எனினும் இந்த தொடரில் பாகிஸ்தானை இன்னும் ஒரு வெற்றி கூட அடையவில்லை. நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்த இரண்டு தோழியின் காரணமாக அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இருந்து வெளியேறி உள்ளது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது பாகிஸ்தான் அணி.
அடுத்ததாக கடைசி லீக் போட்டி பங்களாதேஷ் அணியுடன் மோத உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் கோப்பை வென்ற தொடருக்கு அடுத்து அடுத்த தொடரில் ஒரு புள்ளி கூட எடுக்காமல் வெளியேறிய அணி என்ற மோசமான பெரும் அவமானத்தை சந்திக்கும் பாகிஸ்தான் அணி. அதனால் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் கடைசி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை அந்த போட்டி நடைபெறும் மைதானத்தில் மலையின் காரணமாக போட்டி நடைபெற்றால் ஒரு புள்ளிகளுடன் மானத்தை தக்க வைத்துக் கொள்ளும். இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2013 இல் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், மழையின் காரணமாக போட்டி தடைப்பட்ட காரணத்தால் ஒரு புள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.