மேகாலயா மாநிலத்தை உலுக்கிய கொலைக்கேஸில் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது, இந்த கொலை தொடர்பான விசாரணையில் போலீசாருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்துக்கு காவல்துறை அதிகாரிகள் சந்தேகப்பட்ட அனைவரையும் அழைத்துச் சென்று, அவர்கள் அந்த இரவில் எங்கு இருந்தார்கள், என்ன நடந்தது என்பதை விரிவாகக் கேள்விப்பட்டனர். இந்த நேரத்தில், சோனம் தனது கணவனை கொலை செய்த முறையை நடிகை போல் நடித்து விளக்கியதும், அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “இது சாதாரண கோபத்தில் செய்த குற்றமல்ல. திட்டமிட்டு, நேரம் பார்த்து, முன்கூட்டியே ஒருங்கிணைத்து செய்யப்பட்ட கொலை சம்பவம்,” என போலீஸ் அதிகாரி விவேக் சியாம் கூறினார். தாக்குதலில் மூன்று பேர் ஈடுபட்டதாகவும், முதல் தாக்குதலை விஷால் என்பவர் மேற்கொண்டதாகவும், தொடர்ந்து ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்பவர்களும் தாக்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோனம் தனது கணவனுக்குப் பக்கத்தில் நின்றபடியே தாக்குதலை கண்காணித்துள்ளார், மேலும் தாக்குதலுக்கான முன்னோட்ட அறிகுறியையும் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, ராஜாவின் உடலை மூவர் சேர்ந்து வீசியதாகவும், பிணத்தை மறைக்க முயற்சித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெருங்கிய உறவினர்களிடையே நடந்த இந்த வகை கொலை சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.