கிரிக்கெட்: நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அதிகரன்களை குவித்த சாய் சுதர்சனக்கு அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த வருடம் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அபாரமாக அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி மொத்தம் 759 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்த வீரராக இடம் பிடித்தவர் தமிழக வீரர் சாய் சுதர்சன். அவரின் தொடர்ச்சியான அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் பெற்றுள்ளார் ஆனால் அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்குமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
அதற்குக் காரணம் இவர் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வந்தார் ஆனால் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அவரின் சராசரி குறைவாகவே உள்ளது. இவர் மொத்தம் 29 முதல் தர போட்டிகளில் 49 இன்னிங்சில் விளையாடி இதுவரை 1957 ரன்கள் அடித்துள்ளார். மேலும் இவரின் பேட்டிங் சராசரி 39.93 ஆகும். அதுமட்டுமல்லாமல் ஏழு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்களையும் அடித்துள்ளார்.
ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் தற்போது பல முக்கிய வீரர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர் அதில் ஜெய்ஸ்வால், கில், கே எல் ராகுல், கருண் நாயர் ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி என முக்கிய வீரர்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் துருவ் ஜுரல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றன. இதனால் இந்த போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றன.