நியூயார்க்: ஈரான் இஸ்ரேல் தொடர்ந்து இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானையை தாக்கியது. இஸ்ரேலுடனான போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு ஈரானின் அணு திட்டங்களை நிறுத்தும் வரை போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று டிரம்ப் கூறி வந்தார்.
போர் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது போரை நிறுத்தி விட்டோம் என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமை பேசி வந்தார். மேலும், இஸ்ரேலும் ஈரானும் ஒரே நேரத்தில் தன்னிடம் சமாதானம் பேசியதாக கூறினார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய்களின் விலை உயரும் என உலக நாடுகள் மத்தியில் அச்சம் நிலவியது.
மேலும், எதிரியின் கையில் சிக்கி விடாதீர்கள் எண்ணெய் விலையை குறையுங்கள் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார் தற்போது வைரலாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஒருபுறம் ஈரான் மீதான தாக்குதல் ஒருபுறம் என ட்ரம்புக்கு சவாலாக உள்ளது. அதன்படி கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லாமல் திசை மாறி சென்று உள்ளன சில கப்பல்கள். ஹார்மோஸ் ஜலசந்தி மூடி விடுவோம் என அதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு எச்சரித்துள்ளது ஈரான். நேற்று அமெரிக்க நடத்திய தாக்குதலால் ஈரான் ஜலசந்தியை மூட வாய்ப்புள்ளதாக உலக நாடுகளின் மத்தியில் கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மத்திய கிழக்கு வளைகுடா ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடல்களை இணைக்கும் குறுகிய நீர் வழி. இதன் குறுகலான இடத்தில் சுமார் 21 மைல் அகலம் கொண்டது என கூறப்படுகிறது. உலக அளவில் எண்ணெய் வர்த்தக நடைபெறுவதில் சுமார் 20 சதவீதத்தை ஹார்முஸ் ஜலசந்தி கையாளுகிறது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்த எச்சரிக்கையானது உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் என்றும் ஒருபுறம் விமர்சித்து வருகின்றன. இதனால் டிரம்ப் போக்குவரத்து பாதிப்புக்காக அச்சத்தில் உள்ளார். நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் கத்தாரில் ஆறு ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரம் முன்பு இரண்டு தூதராக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எச்சரிக்கை விடுத்த பின்பே அமெரிக்கா எதிர்ப்பாக்காத நிலையில் தாக்குதல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.