இனி சிலிண்டர் வராதா?? புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு!!

உலகின் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையால் பல நாடுகளின் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் தெளிவாக உணரப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் கிடைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையை சமாளிக்க மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதலில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களை விட, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க முடியும். இதற்கிடையில், கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து வீட்டு நுகர்வோரும் eKYC செயல்முறையை கட்டாயமாக முடித்து இருக்க வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த eKYC செயல்முறையை Aadhaar FaceRD செயலி அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனங்களின் செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே முடிக்கலாம். தேவைப்பட்டால் கேஸ் டீலர்களும் இதில் உதவி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் போர் நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பாதை வழியாக பல நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படும் நிலையில், இந்த தடங்கல் கேஸ் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகியுள்ளது.

இதன் விளைவாக சிலிண்டர் விலைகளும் உயர்ந்துள்ளன. வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதனால் சிலர் கேஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலையில் விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram