பட்டப்பகலில் பெண்ணை துரத்தி நகை பறிப்பு!! சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சஞ்சப்பா நகரில் நடந்த ஒரு நகை பறிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இரவில் மட்டும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் என்ற எண்ணத்தை முறியடித்து, பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை முயற்சி பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம், சாலை வழியாக ஸ்கூட்டியில் தனியாக சென்ற பெண் ஒருவர், தனக்கு பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இரண்டு நபர்கள் பைக்கில் வருவதை கவனித்திருந்தார்.  சந்தேகம் அடைந்த அவர் வேகமாக ஸ்கூட்டியை ஓட்ட முயன்றார். ஆனால், பைக்கில் வந்த இருவரும் அவரை விட்டுவிடாமல் பின் தொடர்ந்தனர்.

கொள்ளையர்கள் ஆரம்பத்தில் உதவி கேட்பது போல நடித்து, நெருங்கி நகையை திருட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதியில் வழி முடிந்ததால் ஸ்கூட்டியை நிறுத்திய அவர் அங்கு குரல் கொடுத்து கத்தியபடி உதவி கோரினார். இதைக் கேட்டுக் கொண்டு வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது சம்பவம் நொடிகளில் நடந்தேறிவிட்டது. கொள்ளையர்களில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி பெண்ணை ஓட ஓட  தலைமுடியைப் பிடித்து கழுத்தில் இருந்த நகையை பறித்து விட்டார்.  இந்த சம்பவம் அருகே உள்ள வீட்டு சிசிடிவியில் முழுவதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கண்ட மக்கள், பட்டப் பகலில் கூட பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவ்வளவு கொடூரமாக பறிக்கப்பட்ட நகை, உண்மையில் தங்கம் அல்லாது கவரிங் நகை என்பது கூட சோகத்தைத் தந்துள்ளது. நகை கவரிங் என்றாலும், அந்த பெண்ணின் உயிருக்கு ஏற்பட்ட அபாயம் தான் மிகப் பெரியது என்று பெரும்பாலோர் கருத்து தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பைக் மற்றும் ஹெல்மெட் அடையாளங்களை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அருகிலுள்ள செக்போஸ்ட்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்பதே போலீசார் பரிந்துரை. முக்கியமாக தனியாக செல்லும் போது சந்தேக நபர்கள் பின் தொடரும் போது உடனே பாதுகாப்பான இடத்தை நாடி, அருகில் இருக்கும் பொதுமக்களுக்கு தகவல் தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram