ஒவ்வொரு இளைஞர்களும் தினம் தோறும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை, மன அழுத்தம் என பல காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். எளிமையான வீட்டு வைத்தியத்தின்படி சரி செய்ய இயலும்.
நம் வீட்டில் சாதம் வடிக்கும் கஞ்சில் அதிக அளவு வைட்டமின்கள் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதனை எடுத்து தலையில் மாஸ்க் போல் போட்டு வரலாம்.
இப்படி மாஸ்க் போல் செய்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் மட்டுமே தலை குளிக்க வேண்டும்.
அச்சமயம் ஷாம்பு மற்றும் பொடி போன்ற எதையும் போடக்கூடாது.
இதை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வரும் நிலையில் கூந்தல் கருமையாகி முடி உதிர்வு பிரச்சனை நிவர்த்தியாகும்.
அதேபோல நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக அளவு புரோட்டின் கால்சியம் இருப்பதாக பார்த்து உண்ண வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.





